வீடு புகுந்து 30 சவரன் நகை கொள்ளை..கதறும் காங்கிரஸ் நிர்வாகி!

 

வீடு புகுந்து 30 சவரன் நகை கொள்ளை..கதறும் காங்கிரஸ் நிர்வாகி!

தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்ததில் இருந்து, அரசியல் பிரமுகர்கள் வீட்டில் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில், நேற்று திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் இருக்கும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வீடு புகுந்து 30 சவரன் நகை கொள்ளை..கதறும் காங்கிரஸ் நிர்வாகி!

துரைமுருகன், அவரது மகன் மற்றும் சகோதரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பண்ணை வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாததை அறிந்த கொள்ளையர்கள், கைவரிசையைக் காட்டினர். ஆனால் அங்கு நகை, பணம் ஏதும் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமார்ந்தது தான் மிச்சம். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தேர்தலுக்காக துரைமுருகன் தனது பண்ணை வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில், அங்கு கொள்ளை முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது.

வீடு புகுந்து 30 சவரன் நகை கொள்ளை..கதறும் காங்கிரஸ் நிர்வாகி!

இந்த நிலையில், செங்கல்பட்டு அருகே காங்கிரஸ் நிர்வாகி ஒருவரின் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திம்மாவரத்தில் வசித்து வரும் காங்கிரஸ் மாவட்ட இளைஞரணி நிர்வாகி பிரவீன்குமார் வீட்டில் 30 சவரன் நகையும், ரூ.3 லட்சம் ரூபாய் பணத்தையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளையர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.