அரிசி எல்லாம் தங்கமாக மாறும் – சதுரங்க வேட்டை பட பாணியில் ஒரு மோசடி கும்பல்

 

அரிசி எல்லாம் தங்கமாக மாறும் – சதுரங்க வேட்டை பட பாணியில் ஒரு மோசடி கும்பல்

பித்தளையை இருடியம் என்று சொல்லியும் அரசியில் வலம்புரி சங்கை வைத்தால் தங்கமாக மாறும் என்றும் சதுரங்க வேட்டை படத்தில் நாயகன் பல்வேறு மோசடிகளை செய்வதுபோல அரிசியில் வலம்புரி சங்கு வைத்தால் அனைத்தும் தங்கமாக மாறும் என்று ஒரு கும்பல் திருவண்ணாமலையில் மோசடியில் ஈடுபட்டு போலீசில் சிக்கி இருக்கிறது.

அரிசி எல்லாம் தங்கமாக மாறும் – சதுரங்க வேட்டை பட பாணியில் ஒரு மோசடி கும்பல்

வலம்புரி சங்கினை மாட்டின் மடியில் வைத்தால் தன்னாலேயே பால் கரந்து சங்கின் உள்ளேயே இருக்கும் என்றும், வலம்புரி சங்கில் பாலை ஊற்றினால் அது தயிராக மாறும் என்றும் வலம்புரி சங்கினை அரிசியில் வைத்தால் அத்தனையும் தங்கமாகும் என்றும், பூஜையறையில் வைத்தால் கோடீஸ்வரன் ஆகவே எப்போதும் இருப்பீர்கள் என்று சொல்லி தமிழகமெங்கிலும் மோசடி நடந்து வருகிறது .

தமிழகம் முழுவதும் பலரும் இப்படி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த வேப்பூர் செக்கடி கிராமத்தைச் சேர்ந்த பரணி என்பவரிடம், எங்களிடம் அபூர்வமான வலம்புரி சங்கு இருக்கிறது. அதை அரிசியில் வைத்தால் அத்தனையும் தங்கமாக மாறும். இது இரண்டு கோடி ரூபாய். எங்களுக்கு தெரிந்த ஒருவர் உங்களின் நம்பரைக் கொடுத்தார். இதை விற்பனை செய்து கொடுத்தால் உங்களுக்கு கமிசனாக பல லட்சம் ரூபாய் தருகிறோம் என்று ஆசைவார்த்தை கூறி இருக்கிறார்.

அரிசி எல்லாம் தங்கமாக மாறும் – சதுரங்க வேட்டை பட பாணியில் ஒரு மோசடி கும்பல்

திருவண்ணாமலை கிரிவலம் சாலைக்கு இரவில் வாருங்கள். அங்கு வந்து சங்கினை காட்டுகிறோம். பார்த்துவிட்டு போய் வியாபாரம் பேசுங்கள் என்று சொல்லவும் சரி என்றுசொல்லி இருக்கிறார். அவர்களின் பேச்சில் சந்தேகம் அடைந்த பரணி போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

இதையடுத்து அந்த கும்பல் வருவதாகச் சொன்ன திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாதாரண உடையில் போலீசார் அமர்ந்து இருந்துள்ளனர். நள்ளிரவு ஒரு மணிக்கு அங்கே ஒரு கார் வந்து இருக்கிறது. அந்த காரில் இருந்தவர்கள் தனியாக நின்றிருந்த பரணி அவருடன் மாற்று உடையில் சென்றிருந்த காவலர்கள் உள்ளிட்டோரை அழைத்துள்ளனர். பரணியும் ரெண்டு பேரும் காரில் ஏற்றிக்கொண்டு அந்த மோசடி கும்பல் வலம்புரி சங்கு என்று ஒரு பொய்யான சங்கை காண்பித்துள்ளனர். அதனை பார்த்த போது சாதாரணமாக தெருவில் விற்கப்படும் சங்கு என்று தெரியவந்திருக்கிறது.

அரிசி எல்லாம் தங்கமாக மாறும் – சதுரங்க வேட்டை பட பாணியில் ஒரு மோசடி கும்பல்

இதையடுத்து அங்கு மறைந்திருந்த காவல்துறையினர் காரில் வந்தவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலை வா.உ.சி நகரைச் சேர்ந்த கோவிந்தராஜ், தீபக், ராணிப்பேட்டை சிப்காட்டை சேர்ந்த சதீஷ், வேட்டவலம் உமா சங்கர், செஞ்சி ஜெயங்கொண்டம் அரசு, அரியாங்குப்பம் ராம்குமார், திருவண்ணாமலை பெரிய கோபுரம் அஸ்வத்தாமன், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நாகராஜ் ஆகிய எட்டு பேர் பிடிபட்டனர்.

விசாரணையில் சாதாரண சங்கினை வலம்புரி சங்கு என்று சொல்லி பல கோடிக்கு விற்பனை செய்து மோசடி செய்து வந்தது தெரியவந்தது. எட்டு பேரையும் அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்த போலீஸார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமாரிடம் ஆஜர்படுத்தினர். இவர்கள் வேறு ஏதேனும் குற்ற வழக்கில் தொடர்புடையவர்களா என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்சமயம் கைது செய்யப்பட்டவர்களை வேலூர் சிறையில் அடைத்துள்ளனர் போலீஸார்.