போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகை ரியா ஜாமீன் கோரி மனுத்தாக்கல்!

 

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகை ரியா ஜாமீன் கோரி மனுத்தாக்கல்!

நடிகர் சுஷாந்த் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ரியா ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், முக்கிய குற்றவாளியாக சுஷாந்தின் காதலி ரியா சக்கரவர்த்தி குற்றஞ்சாட்டப்பட்டார். அண்மையில் ரியாவை மும்பையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்த நிலையில், அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து ரியா சிறையில் அடைக்கப்பட்டார்.

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகை ரியா ஜாமீன் கோரி மனுத்தாக்கல்!

அடுத்த சில நாட்களில் ரியா தரப்பில் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் அவர் மீண்டும் போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட போது, போதைப்பொருள் வாங்கியது தொடர்பாக ரியாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அச்சமயம் ரகுல் ப்ரீத் சிங், பாலிவுட் நடிகை சாரா அலிகான் உள்ளிட்ட பலருக்கு போதை பொருள் சப்ளை செய்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக ரியா கோர்த்து விட்டார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திதால், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகை ரியா ஜாமீன் கோரி மனுத்தாக்கல்!

இந்த நிலையில் ரியா சக்கரவர்த்தியும் அவரது சகோதரர் ஷோவிக்கும் ஜாமீன் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கிய ரியாவுக்கும் அவரது சகோதரருக்கும் அக்.6 வரை, போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் காவலை நீடித்ததால் ரியா தற்போது மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரிக்கப்பட உள்ளது.