காங்கிரஸ் வேட்பாளர்களை குறிவைக்கும் கொரோனா… மேலும் ஒருவர் பலி!

 

காங்கிரஸ் வேட்பாளர்களை குறிவைக்கும் கொரோனா… மேலும் ஒருவர் பலி!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிதீவிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். இரண்டாம் அலையில் பல்வேறு சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் தாக்குதலுக்குள்ளாகியிருக்கின்றனர்.

காங்கிரஸ் வேட்பாளர்களை குறிவைக்கும் கொரோனா… மேலும் ஒருவர் பலி!

குறிப்பாக காங்கிரஸ் வேட்பாளகள் இருவரு அடுத்தடுத்து மரணமடைந்திருக்கின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி வேட்பாளரான மாதவராவ் சில நாட்களுக்கு முன் கொரோனாவுக்குப் பலியானார். அவர் இறந்த ஈரம் காய்வதற்கு முன்பாகவே ஒடிசா மாநிலம் பிபிலி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அஜித் மங்கராஜ் இன்று உயிரிழந்தார்.

காங்கிரஸ் வேட்பாளர்களை குறிவைக்கும் கொரோனா… மேலும் ஒருவர் பலி!

தற்போது மேற்கு வங்கத்தில் போட்டியிடும் மேலும் ஒரு வேட்பாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார். சம்செர்கஞ்ச் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான ரிசாவுல் ஹக்குக்கு 2 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை மருத்துவமனையிலேயே உயிரை விட்டார்.