கேரளாவில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!

 

கேரளாவில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கேரளாவில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த நவம்பர் 26 ஆம் தேதி போராட்டம் தொடங்கிய நிலையில் இதுவரை 40ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லாததால் தொடர்ந்து போராட்டம் அரங்கேறி வருகிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாது விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு கரத்தை நீட்டியுள்ளனர் .

கேரளாவில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!

இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேறியுள்ளது. நாட்டின் நன்மை கருதி, பொது நலனைக்கருதி . 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.