குடியரசு தின முன்னெச்சரிக்கை – போலீஸ் பாதுகாப்பில் பாம்பன் பாலம்!

 

குடியரசு தின முன்னெச்சரிக்கை – போலீஸ் பாதுகாப்பில் பாம்பன் பாலம்!

குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் குடியரசு தினத்தன்று பெட்ரோல் நிலையங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்படுகின்றன.

இந்தியா முழுவதும் பாதுகாப்பு காரணங்களுக்காக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையொட்டி ராமேஸ்வரத்தில் பாம்பன் பாலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாம்பன் பாலத்தில் 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குடியரசு தின முன்னெச்சரிக்கை – போலீஸ் பாதுகாப்பில் பாம்பன் பாலம்!

இதேபோல், தமிழகம் முழுவதும் முக்கிய வழிபாட்டுத்தலங்கள், அரசு அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.