இந்த பரிகாரங்கள் செய்தால் வேலை சீக்கிரம் கிடைக்கும்!

 

இந்த பரிகாரங்கள் செய்தால் வேலை சீக்கிரம் கிடைக்கும்!

இந்த கொரோனா காலத்தில் வேலையைத் தக்க வைப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி பலர் வேலையை இழந்துள்ளனர். புதிய வேலை கிடைப்பதும் அரிதாக உள்ளது. திறமை இருந்தும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று ஆதங்கப்படுபவர்கள் இந்த பரிகாரங்களை செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்று நம் சாஸ்திரங்கள் சொல்கின்றன.

இந்த பரிகாரங்கள் செய்தால் வேலை சீக்கிரம் கிடைக்கும்!

ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் சூரிய உதயத்தைப் பார்த்தபடி 108 முறை “ஓம் ஹ்ரீம் சூர்யாய நமஹ” என்ற மந்திரத்தை சொல்லி வர வேண்டும். சூரியனை பார்த்தபடி அமர்ந்துகொண்டு, உங்கள் முன்பு ஒரு அகற்ற பாத்திரத்தில் தண்ணீரை வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். பிறகு இந்த தண்ணீரை செடிகளுக்கு குறிப்பாக அரசமரத்திற்கு விட்டால் தோஷங்கள் நீங்கும். இந்த மந்திரத்தை தொடர்ந்து 10 ஞாயிற்றுக்கிழமைகளில் சொல்ல வேண்டும்.

அரச மரத்துக்கு 43 நாட்கள் தொடர்ந்து தண்ணீர் விட்டு வந்தால் நினைத்த வேலை கிடைக்கும்.

செவ்வாய்க் கிழமை தோறும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று ரோஜா மற்றும் குங்குமம் கொண்டு வழிபாடு செய்வது மற்றும் ஹனுமன் எந்திரத்தை வீட்டில் வைத்து பூஜை செய்வதும் பலன் தரும்.

கோடு, புள்ளி எதுவும் இல்லாத புதிய எலுமிச்சை பழத்தை எடுத்து தலையைச் சுற்றி 13 முறை சுற்ற வேண்டும். பிறகு அதை நான்கு துண்டுகளாக வெட்டி நான்கு தெருக்கள் இணையும் இடத்தில் திக்கு ஒன்றாக வீசிவிட வேண்டும். தொடர்ந்து இப்படி ஏழு நாட்கள் செய்து வருவதன் மூலம் துஷ்ட சக்தி நீங்கும், தடைகள் விலகும்.

வலதுபுறம் தும்பிக்கை அமைந்த விநாயகரை வணங்கி வர வேண்டும். குறிப்பாக சதுர்த்தி நாளில் வழிபட்டு வந்தால் அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.