‘கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்’…தந்தை, மகன் உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு!

 

‘கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்’…தந்தை, மகன் உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் வசித்து வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிஸ் பழைய பேருந்துநிலையம் அருகே செல்போன் மற்றும் மரக்கடை வைத்திருந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி ஊரடங்கால் கடையை அடைக்குமாறு போலீசார் கூறியிருக்கின்றனர். அதனால் போலீசாருக்கும் இவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதால், இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

‘கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்’…தந்தை, மகன் உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு!

அங்கு அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பி, பூதாகரமாக உருவெடுத்துள்ளது. இதனால் மக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இச்சம்பவத்தை எதிர்த்து நாளை முழுக்கடையடைப்பு நடத்தப்படும் என்று வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அவர்கள் இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனை முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில், உயிரிழந்த பென்னிஸ் மற்றும் ஜெயராஜின் உறவினர்கள் அவர்களது உடல்களை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும், கொலை வழக்கு பதிவு செய்தால் தான் உடல்களை பெற்றுக் கொள்வோம் என்று கூறியிருக்கின்றனர். மேலும், இரட்டை கொலைக்கு என்ன தண்டனையோ அதனை வழங்க வேண்டும் என்று உயிரிழந்தவரின் மகள் கூறியிருக்கிறார். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.