பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளின் பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு!

 

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளின் பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு!

11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வின் மறுகூட்டல் முடிவுகள் நாளை பிற்பகல் வெளியாகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக 10 மற்றும் 11 ஆம் வகுப்பின் எஞ்சிய பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் கொரோனாவால் ஊரடங்கு போடப்படுவதற்கு முன்னரே 12 ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதன் பின்னர் கொரோனாவால் விடைத்தாள் திருத்தும் பணி தாமதம் அடைந்து, மே மாதம் வரவேண்டிய தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியாகின.

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளின் பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு!

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்ட நிலையில், குறைவாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தது. ஆனால் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் எந்த விதமான குழப்பங்களும் இல்லையென கூறப்படுகிறது. இதனையடுத்து மதிப்பெண்களின் சந்தேகம் இருப்பவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான மறுகூட்டல் தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் 2 மணிக்கு வெளியாகும் என்றும் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும், அசல் சான்றிதழ் வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.