பப்ஜி விளையாட்டை தடை செய்ய பரிந்துரை! – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்
Jul 13, 2020, 11:24 IST1594619670000
பப்ஜி விளையாட்டை தடை செய்யும் வகையில் பப்ஜி ஆப்புக்குத் தடை செய்ய மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தபோது கூறியதாவது: “உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பங்கேற்கும் வகையில் பாரத் நெட் டெண்டர் மாற்றி அமைக்கப்படும்.
பப்ஜி விளையாட்டால் பல்வேறு பிரச்னைகள் வருவதைத் தொடர்ந்து அதைத் தடை செய்வது தொடர்பாக மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும். அந்த ஆப்பை தடை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வோம்” என்றார்.