மீண்டும் நாளை மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார் ரஜினி?!

 

மீண்டும் நாளை மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார் ரஜினி?!

இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. அதேபோல் போஸுக்கும்  திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்

2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் எங்கள் இலக்கு என்று அறிவித்த ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால்  ரஜினி தலைமையில் கடந்த 5 ஆம் தேதி  சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

 

கூட்டம் முடிந்து சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், ‘கட்சி தொடங்குவது பற்றி ஓராண்டுக்கு பிறகு மாவட்ட செயலாளர்களைச் சந்தித்து பேசினேன்.

கட்சி தொடங்கும் விவகாரத்தில் நிர்வாகிகளுக்குப் பல விஷயங்களில்  திருப்தி. ஆனால் ஒரு விஷயத்தில் எனக்கு தனிப்பட்ட முறையில் திருப்தி இல்லை. ஏமாற்றம் தான். அதை பற்றி பின்னர் தெரிவிக்கிறேன்’ என்றார்.

 

இந்நிலையில் ரஜினி மீண்டும் நாளை காலை 8 மணிக்கு மாவட்ட செயலாளர்களை ராகவேந்திரா மண்டபத்திற்கு வர அழைப்பு விடுத்திருப்பதாக்கத்  தகவல் வெளியாகியுள்ளன.  ஏற்கனவே 5 ஆம் தேதி நடத்திய கூட்டத்தில் தனக்கு ஒரு விஷயத்தில் திருப்தி இல்லை என்று கூறிய ரஜினி, அது குறித்து மீண்டும் ஆலோசிக்க உள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.