பள்ளி சென்ற 14 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் செய்த காம வெறியர்கள்! 

 

பள்ளி சென்ற 14 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் செய்த காம வெறியர்கள்! 

சத்தீஸ்கரில் பள்ளி சென்ற 14 வயது சிறுமியை பள்ளி வேன் ஓட்டுநர் உட்பட மூன்று நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சத்தீஸ்கரில் பள்ளி சென்ற 14 வயது சிறுமியை பள்ளி வேன் ஓட்டுநர் உட்பட மூன்று நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராய்கர் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை பள்ளி வேன் ஓட்டுநர் சந்தோஷ் குப்தா, பள்ளியில் சுற்றுலா செல்வதாக ஏமாற்றி தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். லெயுலுங்கா என்ற பகுதிக்கு அழைத்து சென்ற சந்தோஷ் அங்கு தனது நண்பர்கள் இரண்டு பேரை வருமாறு கூறியுள்ளார். அதன்பின் அங்கிருந்து நண்பர்களுடன் சிறுமியை லாரி பானி அணைக்கு அழைத்து சென்றுள்ளார்.

rape

சக நண்பர்கள் யாரும் வராததால் திட்டமிட்டு இங்கு அழைத்துவரப்பட்டதாக உணர்ந்த அந்த சிறுமி தன்னை பெற்றோரிடம் கொண்டு சென்றுவிடுமாறு கதறி அழுதுள்ளார். ஆனால் சந்தோஷ் குப்தா உள்ளிட்ட மூன்று பேரும் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன்பின் மறுநாள் காலை  சிறுமியை அழைத்துசென்று அவரது பெற்றோரிடம் சந்தோஷ் விட்டுள்ளார், அந்த சிறுமி பெற்றோரிடம் நடந்தவற்றை கூறவே பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சந்தோஷ் குப்தா, யாதவ் மற்றும் சஞ்சய் பைக்ரா ஆகிய மூன்று பேர் மீது கடத்தல், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தல் மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை, போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் யாதவை மட்டும் கைது செய்த காவல்துறையினர் மற்ற இருவரை தேடி வருகின்றனர்.