நடந்து சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு: தர்ம அடி வாங்கிய இளைஞர்…!

 

நடந்து சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு: தர்ம அடி வாங்கிய இளைஞர்…!

சுசிலா என்ற மூதாட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார்.

கோவையில், குனியமுத்தூரைச் சேர்ந்த சுசிலா என்ற மூதாட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். செல்லும் வழியில் எதிரே வந்த இளைஞன் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த நகையை அறுத்துள்ளான். அவன் நகையை அறுத்த உடனே சுசிலா அவன் நகையை எடுத்துச் செல்ல விடாமல் அவனிடம் சண்டை போட்டுக் கொண்டுள்ளார். சண்டையில் மூதாட்டியின் நகை ஒரு பாதி திருடனிடமும், ஒரு பாதி மூதாட்டியிடமும் கிடைத்துள்ளது. அந்த ஒரு பாதியை மட்டும் எடுத்துக் கொண்டு அந்த இளைஞர் ஓடியுள்ளார்.

man

 

அதன் பின், மூதாட்டி எழுப்பிய சத்தத்தில் பாதி நகையுடன் சென்றுக் கொண்டிருந்த இளைஞனை பொது மக்கள் வழி மறித்துப் பிடித்துள்ளனர். அவனைத் தர்ம அடி அடித்து, அவனிடம் இருந்த பாதி நகையை வாங்கி மூதாட்டியிடம் ஒப்படைத்துள்ளனர். அதன் பின்னர், பொதுமக்கள் சேர்ந்து அவனை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். காவல்துறையினர், நகையைப் பறித்த இளைஞனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.