சென்னையில் டாக்டர் எனக்கூறி மருத்துவம் பார்த்த இளைஞர் கைது..!

 

சென்னையில் டாக்டர் எனக்கூறி மருத்துவம் பார்த்த இளைஞர் கைது..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் 22 வருடங்களாக ‘தர்ம ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி’ இயங்கி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் 22 வருடங்களாக ‘தர்ம ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி’ இயங்கி வருகிறது. அரசு உதவி பெற்று இயங்கி வரும் இந்த தனியார் கல்லூரியில் வென்மணி என்ற மாணவர் படித்து வருகிறார். ஆயுர்வேத மருத்துவப்படிப்பு மொத்தமாக 6 ஆண்டுகள் கற்றுத் தரப்படும். 2014 ஆம் ஆண்டு இக்கல்லூரியில் சேர்ந்த வென்மணி, தற்போது 5 ஆம் வருடம் படித்து வருகிறார். 

Venmani

மருத்துவப்படிப்பை முடிக்கும் வரை நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். தனது மருத்துவப்படிப்பை முடிக்க இன்னும் ஒரு ஆண்டுக்கு மேல் இருக்கும் வென்மணி, தான் மருத்துவர் எனக் கூறி சென்னை, செம்மஞ்சேரியில் மருத்துவம் பார்த்ததாக எழுந்த புகாரின் பேரில், வென்மணி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அதன் பின், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட வென்மணிக்கு நீதிபதி சிறைத் தண்டனை வழங்குமாறு உத்தரவிட்டதையடுத்து, வென்மணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.