சுய விளம்பரத்திற்காக தன்னைத் தானே தாக்கிக் கொண்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகி
திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பகவான் நந்து. இவர் இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளராக இருக்கிறார்.
திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பகவான் நந்து. இவர் இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளராக இருக்கிறார். மேலும் கணக்கம்பாளையம் பகுதியில் `எஸ்.ஆர்.எலெக்ட்ரிகல்ஸ்’ என்ற பெயரில் மிக்ஸி, கிரைண்டர் ரிப்பேர் செய்யும் கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். நேற்றிரவு கடையை மூடிவிட்டு, காந்தி நகரில் உள்ள அவருடைய வீட்டுக்கு வந்துகொண்டிருக்கும்போது அவரை சில மர்மநபர்கள் தாக்கியதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
சில மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி விட்டதாக கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பகவான் நந்து தன் ஓட்டுநர் உதவியோடு அரசியல் ஆதாயத்திற்காகவும் கட்சியில் முக்கிய பொறுப்பை பெறுவதற்காகவும் தன்னைத் தானே வெட்டிக் கொண்டு நாடகமாடியதை காவல்துறையினர் கண்டறிந்தனர். இதைஅடுத்து வழக்கை மாற்றிய காவல்துறையினர் இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.