குற்றாலத்தில் குளித்துக்கொண்டிருந்த  பயணியின்  6 சவரன் நகை பறிப்பு

 

குற்றாலத்தில் குளித்துக்கொண்டிருந்த  பயணியின்  6 சவரன் நகை பறிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றால அருவியில் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணி அணிந்திருந்த ஆறு சவரன் தவறியதால் அங்கே இருந்த சக பயணிகளிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றால அருவியில் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணி அணிந்திருந்த ஆறு சவரன் தவறியதால் அங்கே இருந்த சக பயணிகளிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

kuttralam

கடந்த சில வாரங்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் கொட்டிய கனமழையால் அங்குள்ள மெயினருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி, ஐந்தருவி உட்பட அத்துணை அருவிகளிலும் நீர் வரத்து அதிகமாக காணப்படுகிறது. இதை கண்டுகளிப்பதற்கும் குளித்துச்செல்வதற்கும் வெவ்வேறு ஊர்களிலிருந்து பல  சுற்றுலா பிரியர்கள் வந்துசெல்கின்றனர். 

chain

இந்நிலையில், இன்று ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர்  மெயினருவியில் குளித்துக் கொண்டிருக்கும்போது தான் அணிந்திருந்த ஆறு சவரன் சங்கிலியை யாரோ திருடிச்சென்றதாக அங்கே பாதுகாப்புப்  பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரியிடத்தில் புகார் அளித்திருக்கிறார். 
இதைத் தொடர்ந்து குற்றாலத்தில் குளித்துவிட்டு திரும்பும் அனைத்து சுற்றுலா பயணிகளிடமும் போலீசார் சோதனையை நடத்தி வருகின்றனர்.