கடந்த ஆண்டே நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றுள்ளது: சிபிசிஐடி விசாரணை..!

 

கடந்த ஆண்டே நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றுள்ளது: சிபிசிஐடி  விசாரணை..!

கடந்த செப்டம்பர் மாதம், நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக எழுந்த புகாரின் பேரில் உதித் சூர்யா என்ற மாணவன் கைது செய்யப்பட்டார்.

கடந்த செப்டம்பர் மாதம், நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக எழுந்த புகாரின் பேரில் உதித் சூர்யா என்ற மாணவன் கைது செய்யப்பட்டார். உதித் சூர்யாவிடம் சிபிசிஐடி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், நீட் தேர்வில் இன்னும் 4 மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்ததாகத் தகவல் கிடைத்தது. அதன் படி, அந்த 4 மாணவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் வசிக்கும் மாணவியும் ஆள்மாறாட்டம் செய்திருப்பதாக எழுந்த புகாரின் பேரில் காவல் துறையினர் மாணவியைக் கைது செய்தனர். இப்படித் தொடர்ந்து ஆள்மாறாட்டம் நடந்துள்ளதாக எழுந்த புகாரால், மருத்துவக் கல்லூரி நிர்வாகம் குழப்பமான நிலையில் உள்ளது. 

Udit surya

இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, கடந்த ஆண்டே நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் நடந்துள்ளது எனப் புகார் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு பீகாரில் நடந்த நீட் தேர்வில் சென்னை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக சிபிசிஐடிக்கு மருத்துவக் கல்லூரி இயக்குநரகம் தகவல் அளித்துள்ளது. அதன் படி, அந்த மாணவரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.