ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாப பலி!
5 பேர் துணி துவைக்கச் சென்றுள்ளனர். அப்போது கலை என்ற 16 வயதான சிறுமி ஒருவர் சேற்றுக்குள் சிக்கி கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே கரசங்கால் ஏரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் உட்பட 5 பேர் துணி துவைக்கச் சென்றுள்ளனர். அப்போது கலை என்ற 16 வயதான சிறுமி ஒருவர் சேற்றுக்குள் சிக்கி கொண்டார்.
அப்போது கலையை காப்பாற்றுவதற்காக சித்ரா(35) திலகா(40) பூர்ணிமா(12) சூரியா(13) ஆகிய 4 பேரும் ஏரிக்குள் இறங்கியுள்ளனர். இதில் நீச்சல் தெரியாததால் திலகாவை தவிர மற்ற நால்வரும் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உயிர்பிழைத்த திலகா குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இறந்த நான்கு பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது