இரண்டாவது நாளாக அதிரடியாக உயர்ந்தது தங்க விலை!

 

இரண்டாவது நாளாக அதிரடியாக உயர்ந்தது தங்க விலை!

சற்று குறைந்து வந்த தங்க விலை நேற்று அதிரடியாக உயர்ந்ததைத் தொடர்ந்து இன்றும் உயர்ந்துள்ளது. 

இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்க விலை உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்தது. அதன் பின்னர், கடந்த சில நாட்களாகத் தங்க விலை அதிரடியாக உயர்ந்து ரூ.33 ஆயிரத்தை எட்டி வரலாறு காணாத விலை உயர்வை அடைந்தது. அதனையடுத்து சற்று குறைந்து வந்த தங்க விலை நேற்று அதிரடியாக உயர்ந்ததைத் தொடர்ந்து இன்றும் உயர்ந்துள்ளது. 

ttn

 இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.74 உயர்ந்து  ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.4,191க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.592 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.33,528க்கு விற்கப்படுகிறது.

மேலும், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.41.70க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.41,700க்கும் விற்கப்படுகிறது.