அதிவிரைவில் பரவி வரும் வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சல் !!!
Sep 20, 2019, 11:04 IST1568957666000
அரசுக் கல்லூரி மருத்துவமனையில் 38 பேர் கடும் காய்ச்சலால் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மழைக்காலம் துவங்கிய நிலையில், ஆங்காங்கே காணப் படும் நீர்த்த தேக்கங்களும், திறந்த கால்வாய்களும், குப்பை கூளங்களும் கொசுக்கள் அதிகரிப்பதற்கு சாதகமாக உள்ளது. இதனால், கொடிய வைரஸ் காய்ச்சல்களும் டெங்கு காய்ச்சலும் பரவிக் கொண்டே வருகிறது. எத்தனையோ விழிப்புணர்வுளும், தடுப்புப் பணிகள் செயல் படுத்தப் பட்டாலும், இக்காய்ச்சல்களை தடுக்க இயலாத சூழ்நிலையே நிலவி வருகிறது.
இதனையடுத்து, திருவாரூரில் உள்ள அரசுக் கல்லூரி மருத்துவமனையில் 38 பேர் கடும் காய்ச்சலால் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அதில் 6 பேருக்கு வைரஸ் காய்ச்சல் எனவும் 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் எனவும் உறுதியளிக்கப் பட்டதாக தகவல்கள் வெளியாகின்றன.