பழமைவாதம், மூட நம்பிக்கையை எதிர்க்கும் திருமாவளவன்! – ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து
இன்று பிறந்த நாள் கொண்டாடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனனுக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தி.மு.க தலைவர் இன்று வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “பழைமைவாதம் – மூட நம்பிக்கை – சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை உறுதியாக எதிர்த்து நின்று,
பழைமைவாதம் – மூட நம்பிக்கை – சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை உறுதியாக எதிர்த்து நின்று, ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குப் போராடும் ‘எழுச்சித்தமிழர்’;
‘சமத்துவப் பெரியார்’ தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்பு;
வி.சி.க தலைவர் @thirumaofficial அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
— M.K.Stalin (@mkstalin) August 17, 2020
ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குப் போராடும் ‘எழுச்சித்தமிழர்’; ‘சமத்துவப் பெரியார்’ தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்பு; வி.சி.க தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!” என்று கூறியுள்ளார்.
சென்னை தவிர பிற மாவட்டங்களில் #Covid19 பரவியதில் #TASMAC-க்கு பெரும்பங்குண்டு எனத் தெரிந்தும், சென்னையிலும் திறப்பது பெரும் தவறு.
யார் பாதிக்கப்பட்டாலும், வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல்!
ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் வேண்டாம். வைரசை மேலும் பெருக்கிட கூடாது!
— M.K.Stalin (@mkstalin) August 17, 2020
மற்றொரு ட்வீட்டில், “சென்னை தவிர பிற மாவட்டங்களில் கோவிட்19 பரவியதில் டாஸ்மாக்குக்கு பெரும்பங்குண்டு எனத் தெரிந்தும், சென்னையிலும் திறப்பது பெரும் தவறு. யார் பாதிக்கப்பட்டாலும், வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல்! ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் வேண்டாம். வைரசை மேலும் பெருக்கிட கூடாது!” என்று கூறியுள்ளார்.