ஆளுநருடன் சபாநாயகர் அப்பாவு திடீர் சந்திப்பு!

 

ஆளுநருடன் சபாநாயகர் அப்பாவு திடீர் சந்திப்பு!

தமிழக ஆளுநர் பன்வாரிலாலை காலை 10.30 மணிக்கு சந்திக்கிறார் சபாநாயகர் அப்பாவு.

ஆளுநருடன் சபாநாயகர் அப்பாவு திடீர் சந்திப்பு!

தமிழகத்தில் கொரோனா காரணமாக வருகின்ற 21 ஆம் தேதி சட்டமன்ற முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. திமுக ஆட்சி அமைந்த பிறகு நடைபெறும் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் என்பதால் இதற்கான ஏற்பாடுகளை சபாநாயகர் அப்பாவு நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.

அத்துடன் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி கூட்டத்தொடரை நடத்த முடிவு முடிவெடுத்துள்ளார். வருகின்ற 21 ஆம் தேதி கலைவாணர் அரங்கில் ஆளுநர் உரையுடன் தமிழகத்தின் 16வது சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் என அறிவித்துள்ளார்.

ஆளுநருடன் சபாநாயகர் அப்பாவு திடீர் சந்திப்பு!

அதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடரும் கலைவாணர் அரங்கில் நடைபெறும் என்று கூறியுள்ள அவர் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழை சட்டமன்றத்திற்குள் கொண்டுவந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆளுநருடன் சபாநாயகர் அப்பாவு திடீர் சந்திப்பு!

இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று காலை 10.30 மணிக்கு சந்திக்கிறார். வருகின்ற 21 ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில் ஆளுநர் உரை வாசிக்க முறைப்படி அவருக்கு அழைப்பு விடுக்க சந்திப்பு நிகழ்ந்த உள்ளதாக தெரிகிறது. இதனிடையே டெல்லியில் முதல்வர் ஸ்டாலின் நேற்று பிரதமரை சந்தித்த நிலையில் இன்று சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டவர்களை சந்திக்க உள்ளார்.