தொழிலதிபர் வீட்டில் கைவரிசையை காட்டிய கொள்ளையர்கள்; தேனியில் பரபரப்பு!

 

தொழிலதிபர் வீட்டில் கைவரிசையை காட்டிய கொள்ளையர்கள்; தேனியில் பரபரப்பு!

தேனியில் தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனியின் முக்கிய பகுதியான என்.ஆர்.டி நகர் பகுதியில் வசித்து வருபவர் சீனிவாசராகவன். தொழிலதிபரான இவரது அண்ணன் கொரோனாவில் இருந்து குணமடைந்து இருப்பதால், அவரை பார்ப்பதற்காக தனது குடும்பத்துடன் அண்ணன் வீட்டுக்கு சென்றிருக்கிறார். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள், அவரது வீட்டில் கைவரிசையை காட்டியுள்ளனர்.

தொழிலதிபர் வீட்டில் கைவரிசையை காட்டிய கொள்ளையர்கள்; தேனியில் பரபரப்பு!

இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல பணிக்கு திரும்பிய பணியாளர்கள், வீட்டின் பூட்டு மற்றும் பீரோ உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும், சீனிவாசராகவனுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். உடனே விரைந்து வந்த போலீசார், இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

தொழிலதிபர் வீட்டில் கைவரிசையை காட்டிய கொள்ளையர்கள்; தேனியில் பரபரப்பு!

சீனிவாசராகவன் வெளியூரில் இருப்பதால், எவ்வளவு நகை கொள்ளையடிக்கப்பட்டது என்ற விவரம் ஏதும் தெரிய வரவில்லை. அவர் தேனிக்கு திரும்பினால் தான், இது குறித்த விவரங்கள் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.