தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு!

 

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 7 மாத காலமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனால் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்புகளை கவனித்து வந்தனர். இந்த சூழலில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரி வகுப்புகள் தூய்மைப்படுத்தப்பட்டன.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு!

இருப்பினும் இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்பு கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெற்றோர் பள்ளிகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தாக தெரிகிறது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு!

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு கூறியுள்ளது. சூழ்நிலைக்கேற்ப பள்ளிகள் திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.