சனீஸ்வரன் கோயிலில் சனிக்கிழமைகளில் பூஜை: ஆன்லைனில் கண்டுகளிக்க ஏற்பாடு!
Jun 14, 2020, 14:18 IST1592124491000
காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் பகவான் ஆலயம் கடந்த 8 ஆம் தேதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திறக்கப்பட்டது.
சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் தரிசனம் செய்ய வட்டமிடபட்டுள்ளது மேலும் பக்தர்களுக்கு கிருமி நாசினி கொடுப்பது, தெர்மல் கருவி பரிசோதனை உள்ளிட்ட வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இருப்பினும் குழந்தைகள், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், வெளி மாநில பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
இந்நிலையில் சனீஸ்வரன் கோயிலில் சனிக்கிழமைகளில் நடைபெறும் பூஜைகளை இணைய சேவை வழியாக கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் பாதுகாப்பான முறையில் வீட்டிலிருந்த படியே சாமி தரிசனம் செய்யலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.