ஓமந்தூரார் மருத்துவமனையில் படுக்கை வசதி இன்றி அவதியுறும் நோயாளிகள்! – ஆதாரத்துடன் பதிவிட்ட பா.ஜ.க தலைவர்
சென்னை ஓமந்தூரார் அரசு சிறப்பு மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவர் படுக்கை வசதியின்றி அவதியுறுவதாக பா.ஜ.க மூத்த தலைவர்களுள் ஒருவரான வானதி சீனிவாசன் மொபைல் எண் ஆதாரத்துடன் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் போதுமான மருத்துவ வசதிகள் பொது மக்களுக்கு கிடைப்பது இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், அரசு மருத்துவமனைகளில் போதுமான படுக்கைகள் உள்ளன என்று தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. சமீபத்தில் தனக்குத் தெரிந்த ஒருவருக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்காதது பற்றி டி.வி செய்திவாசிப்பாளர் வரதராஜன் வீடியோ வெளியிட்டிருந்தார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் பா.ஜ.க மூத்த தலைவர் வானதி சீனிவாசன் நோயாளியின் மொபைல் எண்ணுடன் பதிவிட்டுள்ளார். அதில், “ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், திரு.முருகன்(53) 9444201327 அனுமதிக்கப்பட்டு
Pulse குறைந்து கொண்டிருப்பதாகவும், படுக்கை வசதி இல்லாமல் தவிப்பதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இதே போல் நிறைய நோயாளிகள் அங்கிருப்பதாக கூறுகின்றனர். தயவுசெய்து அமைச்சர் விஜயபாஸ்கர் கவனிக்கவும்” என்று கூறியுள்ளார்.
ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில்,
திரு.முருகன்(53)
9444201327 அனுமதிக்கப்பட்டு
Pulse குறைந்து கொண்டிருப்பமாகவும், படுக்கை வசதி இல்லாமல் தவிப்பதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதே போல் நிறைய நோயாளிகள் அங்கிருப்பதாக
கூறுகின்றனர்.
தயவுசெய்து @Vijayabaskarofl
கவனிக்கவும்.— Vanathi Srinivasan (@VanathiBJP) June 11, 2020
தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு நேர்ந்த அனுபவத்தைக் கூறினாலே வழக்கு பாயும் நிலையில், நோயாளியின் மொபைல் எண்ணுடன் முன்னெச்சரிக்கையாக வானதி சீனிவாசன் பதிவிட்டுள்ளதாக, ட்வீட் வாசிகள் பலரும் பதிவிட்டுள்ளனர். இனியாவது அமைச்சர் விஜயபாஸ்கர் நடவடிக்கை எடுப்பாரா அல்லது இந்த தகவலும் பொய்யானது என்று வானதி சீனிவாசன் மீது வழக்குப் போடுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!