கடலூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை!
Jul 19, 2020, 20:49 IST1595171942000
கடலூர் அருகே கீழ் அருங்குணம் ஊராட்சி மன்றத் தலைவர் சுபாஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கீழ் அருங்குணம் ஊராட்சி மன்றத் தலைவரான சுபாஷ், அதே பகுதியில் இருக்கும் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரது எதிரே வந்த மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலில் சுபாஷ் வெற்றி பெற்றதால் முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு ஒன்றிய செயலாளராக உள்ளார்.