பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

 

பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக கூறப்படும் நிலையிலும், பள்ளிகளை திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. சமீபத்தில் நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என தகவல்கள் வெளியானது. ஆனால் பள்ளிக் கல்வித்துறை அதற்கு மறுப்பு தெரிவித்தது. இப்போதைக்கு பள்ளிகளை திறக்க வாய்ப்பே கிடையாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். எப்போது தான் பள்ளிகள் திறக்கப்படும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

இதனிடையே மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையிலும், மாணவர்களின் உடல் நலம் பாதிக்கப்படுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.