உயர்நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது – கவுசல்யாவின் தாயார் பேட்டி

 

உயர்நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது – கவுசல்யாவின் தாயார் பேட்டி

கடந்த 2015 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த சங்கர் என்பவர் கவுசல்யா என்ற பெண்ணை அவரின் பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டார். அதற்கு அடுத்த ஆண்டே சங்கர் கவுசல்யாவின் உறவினர்களால் ஆணவக்கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து கவுசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு மரண தண்டனை விதித்தும், அவரது தாய்மாமன் உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்தும் திருப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயர்நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது – கவுசல்யாவின் தாயார் பேட்டி

அதன் பின்னர் அவர்கள் 3 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து காவல்துறை தரப்பிலும் மரண தண்டனையை எதிர்த்து கவுசல்யாவின் தந்தையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த அனைத்து வழக்கின் தீர்ப்புகளும் இன்று வெளியானது. அதில், கவுசல்யாவின் தந்தையை விடுதலை செய்தும் மற்ற 5 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அவர்கள் 3 பேரின் விடுதலை உறுதி செய்யப்பட்டது.

உயர்நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது – கவுசல்யாவின் தாயார் பேட்டி

இந்த நிலையில் கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார். அப்போது, நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்றும் கவுசல்யாவை மீண்டும் சேர்த்துக் கொள்வது குறித்து அவரது தந்தை தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்த அரசு தரப்பு வழக்கறிஞர் மேல்முறையீடு செய்வோம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.