கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் திடீர் அனுமதி !

 

கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் திடீர் அனுமதி !

பிரபல திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் திடீர் அனுமதி !

இதய நோய் பிரச்சனைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். நூற்றுக்கணக்கான படங்களுக்குப் பாடல்கள் எழுதி, 7 முறை தேசிய விருது பெற்றுள்ள பாடலாசிரியர் வைரமுத்து மீண்டு வர அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

https://twitter.com/seenuramasamy/status/1339078184738803713

இந்நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “கவிப்பேரரசே கள்ளிக்காட்டின் இதிகாசமே இதயநலத்துடன் திரும்பி வருக.மகா பெரியவரையும் ,முருக கடவுளையும் துணைக்கு அழைக்கிறேன்” என்று பதிவிட்டு கவிஞர் வைரமுத்துவை டேக் செய்துள்ளார்.