2023 உலகக்கோப்பை அக்டோபர்- நவம்பர் மாதங்களில் கண்டிப்பாக நடக்கும்- ஐசிசி
Jul 20, 2020, 21:00 IST1595259027000
இறுதியாக 2011 உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடந்தது. 1983ம் ஆண்டுக்கு பிறகு 28 ஆண்டுகள் கழித்து 2011 உலக கோப்பையை இந்தியா தனது மண்ணில் விளையாடி வென்றது. அந்த உலக கோப்பை தொடரின் இறுதி போட்டி மும்பை வான்கடேவில் நடந்தது. இந்நிலையில் மீண்டும் 12 வருடங்கள் கழித்து இந்தியாவில் நடைபெறவுள்ளது.
2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் அக்டோபர்- நவம்பர் மாதங்களில் நடைபெறும் என ஐசிசி அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பிப்ரவரி, மார்ச் மாதங்களுக் போட்டி நடக்கும் நிலையில் அக்டோபருக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இதேபோல் இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் அக்டோபரில் நடைபெறவிருந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.