மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன் ஜாமீன் கிடையாது- உயர்நீதிமன்றம் அதிரடி
Sep 3, 2020, 22:49 IST1599153558000
தமிழகம் முழுவதும், மணல் கடத்தல் வழக்குகளில் முன்ஜாமீன் கோரிய 40 பேரின் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மணல் கடத்தல் குறித்து கருத்து தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், மணல் கடத்தல்காரர்களால் தான் நிலத்தடி நீர் ஆதாரங்களும் சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படுகிறது என தெரிவித்தனர். முன் ஜாமீன் பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெறுகிறது என சாடிய நீதிபதிகள், மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன் ஜாமீன் கிடையாது என அதிரடியாக அறிவித்தனர்.
ஒவ்வொரு நாளும் குறைந்தது மணல் கடத்தல் தொடர்பான 15 முன்ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வருகிறது என்றும், நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்தாலும், மணல் கடத்தல் தொடர்பாக முன்ஜாமீன் வழக்குகளின் எண்ணிக்கை குறையவில்லை என்றும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.