ஈரோடு- பேருந்து மோதி உயிரிழந்த குடும்பத்துக்கு உதவித்தொகை- அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் நேரில் வழங்கினர்

 

ஈரோடு- பேருந்து மோதி உயிரிழந்த குடும்பத்துக்கு உதவித்தொகை- அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் நேரில் வழங்கினர்

ஈரோடு மாவட்டம் , லக்காபுரம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து மோதி உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ருபாய் பொது நிவாரண உதவி தொகையினைஅமைச்சர்கள் செங்கோட்டையன் கருப்பண்ணன் ஆகியோர் நேரில் வழங்கினர்.

ஈரோடு- பேருந்து மோதி உயிரிழந்த குடும்பத்துக்கு உதவித்தொகை- அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் நேரில் வழங்கினர்

ஈரோட்டில் உறவினர்கள் வீட்டு விழாவிற்கு சென்று விட்டு, திரும்பிக் கொண்டிருந்த மொடக்குறிச்சி தாலுக்கா கூலூரைச் சேர்ந்த பாவாய் அம்மாள், பாலசுப்பிரமணியம் ,மரகதம், மோகம் புரி ஆகிய நால்வர் மீது அரசுப் பேருந்து மோதியது.

ஈரோடு- பேருந்து மோதி உயிரிழந்த குடும்பத்துக்கு உதவித்தொகை- அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் நேரில் வழங்கினர்


இதில், நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்துக்கு காரணம் கடந்த மூன்று மாதங்களாக பேருந்து உரிய பராமரிப்பு இல்லாமல் இருந்ததாகாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்திருந்தனர் . இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் பொது நிவாரண தொகையிலிருந்து தலா ஒரு லட்சம் ருபாய் உதவி தொகையினை வழங்கி முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

ஈரோடு- பேருந்து மோதி உயிரிழந்த குடும்பத்துக்கு உதவித்தொகை- அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் நேரில் வழங்கினர்

இந்த நிலையில், அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் ஆகியோர் நேரில் வருகை தந்து நிவாரண தொகையினை அளித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

-அமுதினி