பழைய முறையிலேயே மின் கட்டணம் கணக்கிடப்படும் – மின்வாரியம் தகவல்

 

பழைய முறையிலேயே மின் கட்டணம் கணக்கிடப்படும் – மின்வாரியம் தகவல்

கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருக்கிறது. அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையில், மின்சார பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. ஊரடங்கால் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பிரபலங்கள் உட்பட பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர்.

பழைய முறையிலேயே மின் கட்டணம் கணக்கிடப்படும் – மின்வாரியம் தகவல்

இந்த நிலையில், மக்கள் வீட்டிலேயே இருப்பதால், கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டி இருப்பதாக தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் தொடர்பாக நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த வழக்கில், பழைய முறையிலேயே மின் கட்டணம் கணக்கிடப்படும் என்றும் பயன்படுத்தப்பட்ட மொத்த யூனிட் அளவின் அடிப்படையில் மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்படவில்லை என்றும் மின் நுகர்வு அதிகமாகி இருப்பதால் தான் மின் கட்டணம் உயர்ந்து இருப்பதாகவும் மின் வாரியம் தெரிவித்துள்ளது. இதனை கேட்டுக் கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.