கருப்பு பூஞ்சை: பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவசர கடிதம்
May 31, 2021, 18:45 IST1622466950000
தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யும் கருப்பு பூஞ்சை மருந்துகளின் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என பிரதமருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், “தமிழகம் முழுவதும் கரும்பூஞ்சை நோய் வேகமாக பரவி வருகிறது, இந்த நோய்க்கான மருந்துகள் தமிழகத்தில் தட்டுப்பாடு நிலவுகிறது. நிலைமையை கருத்தில் கொண்டு, தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யும் கருப்பு பூஞ்சை மருந்துகளின் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். மேலும் தன்னுடைய கோரிக்கையை ஏற்று தமிழகத்துக்கு ஆக்சிஜன் அளவு மற்றும் தடுப்பூசி ஒதுக்கீட்டை அதிகரித்தமைக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.