திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து வழக்கு!

 

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து வழக்கு!

2021 சட்டமன்ற தேர்தலில் 10 வது முறையாக காட்பாடியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் வி. ராமு, அமமுக சார்பில் ஏ.எஸ்.ராஜா, ஐஜேகே வேட்பாளராக எம்.சுதர்சன், நா.த.க வேட்பாளர் ச. திருக்குமரன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் துரைமுருகனுக்கும் , அதிமுக வேட்பாளர் வி. ராமுவுக்கும் கடும் போட்டி நிலவியது. ஆரம்பம் முதலே பின்னடைவை சந்தித்து வந்த துரைமுருகன், இறுதியில் 745 என்ற சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து வழக்கு!

இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெற்றி பெற்றதை எதிர்த்து அதிமுக சார்பில் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 745 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த ராமு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் தாக்க செய்துள்ள மனுவில், ஈவிஎம் இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் வித்தியாசம் உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.