பிரிட்டனிலிருந்து மதுரை திரும்பிய மேலும் இருவருக்கு கொரோனோ!

 

பிரிட்டனிலிருந்து மதுரை திரும்பிய மேலும் இருவருக்கு கொரோனோ!

பிரிட்டனிலிருந்து இரண்டாம் கட்டமாக 38 பேர் மதுரைக்கு திரும்பியுள்ள நிலையில் அவர்களை கண்டறிந்து 32 பேருக்கு கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 2 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

ஏற்கனவே முதல்கட்டமாக மதுரை திரும்பியவர்களில் ஒருவருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பிரிட்டனிலிருந்து மதுரை திரும்பியவர்களில் மொத்தம் 3 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டனிலிருந்து மதுரை திரும்பிய மேலும் இருவருக்கு கொரோனோ!

பிரிட்டனில் இருந்து மதுரை திரும்பிய அனைவரும் சுகாதார துறையினரின் கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், உருமாறிய கொரோனோ பாதிப்பா என்பதை அறிய தொற்று உறுதி செய்யப்பட்ட 3 பேருடைய மாதிரிகள் புனேவிற்கு அனுப்பட்டுள்ளது.