தமிழகத்தில் முற்றிலுமாக குறைந்த கொரோனா பாதிப்பு

 

தமிழகத்தில் முற்றிலுமாக குறைந்த கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 2கோடியே 94 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 3லட்சத்து 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.

தமிழகத்தில் முற்றிலுமாக குறைந்த கொரோனா பாதிப்பு

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 15,108 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8,342 பேர் ஆண்கள், 6,766 பேர் பெண்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23லட்சத்து 39 ஆயிரத்து 705க அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 73ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 272 பரிசோதனை மையங்கள் உள்ளன.

தமிழகத்தில் முற்றிலுமாக குறைந்த கொரோனா பாதிப்பு

இன்று 374 பேர் உயிரிழந்துள்ளார். 130 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 244 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29,280 ஆக அதிகரித்துள்ளது. இன்று 27,463 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21,48,352ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.