‘சென்னையில் பாதிப்பு குறைந்துள்ளது’..சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

 

‘சென்னையில் பாதிப்பு குறைந்துள்ளது’..சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக அளவு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து வந்து கொண்டிருப்பினும் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இந்த நிலையில் சென்னை போரூரில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் மொத்தமாக இருக்கும் 39,590 தெருக்களில் 9,000 தெருக்களில் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது 8,000 ஆகக் குறைந்துள்ளதாகவும் இதுவரை 8 லட்சம் மக்கள் மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டிருப்பதாகவும் மக்கள் மிக்க கவனமாகச் செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

‘சென்னையில் பாதிப்பு குறைந்துள்ளது’..சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

தொடர்ந்து, மக்களுக்கு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், மாஸ்க் அணிந்தால் மட்டுமே கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், மக்கள் சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்ளாமல் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.