முதல்வர் பழனிசாமியுடன் தலைமை செயலாளர் திடீர் சந்திப்பு!

 

முதல்வர் பழனிசாமியுடன் தலைமை செயலாளர் திடீர் சந்திப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. முதல் அலையை காட்டிலும் அதிவேகமாக பரவும் இரண்டாம் அலையில் மூன்று முறை உருமாறிய கொரோனா வைரஸ் வகைகள் பரவி வருவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் மற்றும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமியுடன் தலைமை செயலாளர் திடீர் சந்திப்பு!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அக்கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நோயைக் கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். மாநில அரசின் முயற்சிகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசினார்.

முதல்வர் பழனிசாமியுடன் தலைமை செயலாளர் திடீர் சந்திப்பு!

இந்த நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமியை தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சந்தித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. ராஜீவ் ரஞ்சனுடன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் சென்றுள்ளார். கொரோனா குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசித்த விவரங்கள் பற்றி அவர்கள் ஆலோசனை நடத்தவிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.