வரும் ஆகஸ்ட் மாதம் இந்த தேதியில் விடுதலையாகிறார் சசிகலா! வெளியான புதுதகவல்…
சசிகலா எப்போது விடுதலையாவார் என்பதுதான் தற்போது தமிழக அரசியலில் முக்கியமான விவாதங்களுள் ஒன்றாக உள்ளது. இப்போது வந்துவிடுவார், அப்போத வந்துவிடுவார் என்று பல தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. சசிகலா வெளியே வர உள்ளதால்தான் போயஸ் கார்டன் இல்லத்தை அரசு எடுக்க அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது என்று பலர் கருத்து தெரிவித்தனர்.
சசிகலா செப்டம்பர் மாதம் விடுதலையாவர் என்று தமிழக சிறைத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் தேதியைக் கணித்திருந்தார். இது குறித்து கர்நாடக சிறைத்துறையிடம் ஆர்.டி.ஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்க அம்மாநில சிறைத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
Now breaking:
Mrs. Sasikala Natarajan is likely to be released from Parapana Agrahara Central Jail, Bangalore on 14th August, 2020.
Wait for further update.
— Dr. Aseervatham Achary / முனைவர். ஆசீர் ஆச்சாரி (@AseerAchary) June 25, 2020
இந்நிலையில் திருமதி சசிகலா நடராஜன் வரும் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி பெங்களூரில் உள்ள பரபன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என பாஜகவை சேர்ந்த ஆசீர்வாதம் ஆச்சாரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.