4 ஏடிஜிபிக்களுக்கு டிஜிபியாக பதவி உயர்வு!
Oct 21, 2020, 20:05 IST1603290925000
தமிழக காவல்துறையில் 4 ஏடிஜிபிக்களுக்கு டிஜிபி பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக காவல்துறை நிர்வாகப்பிரிவு கூடுதல் டிஜிபி கந்தசாமி, அதேபிரிவில் டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
நிர்வாகப்பிரிவில் ஏடிஜிபி அந்தஸ்து வரை இருந்த பதவி தற்போது டிஜிபி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி ஷகில்அக்தர் அமலாக்கப்பிரிவு சிறப்பு டிஜிபியாகவும், சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராஜேஷ்தாஸ் அதே பிரிவில் சிறப்பு டிஜிபியாகவும், மேலும் அயல்பணியாக டில்லி இந்தியன் ஆயில் காப்பரேஷன் பாதுகாப்புப்பிரிவு ஏடிஜிபி பிரஜ் கிஷோர் ரவி அங்கேயே டிஜிபியாகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளது.