விஷவாயு தாக்கி இரண்டு தொழிலாளர்கள் பரிதாப பலி.. தமிழகத்தில் தொடரும் மரணங்கள்!

 

விஷவாயு தாக்கி இரண்டு தொழிலாளர்கள் பரிதாப பலி.. தமிழகத்தில் தொடரும் மரணங்கள்!

தமிழகத்தில் விஷவாயு தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். சமீபத்தில் சென்னை பட்டினப்பாக்கத்தில் விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கும் தமிழக அரசு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தூத்துக்குடியிலும் விஷவாயு தாக்கி சிலர் உயிரிழந்தனர்.

விஷவாயு தாக்கி இரண்டு தொழிலாளர்கள் பரிதாப பலி.. தமிழகத்தில் தொடரும் மரணங்கள்!

இந்த நிலையில் தற்போது காஞ்சிபுரத்திலும் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் முத்தியால்பேட்டையில் சாலையில் இருந்து கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் லட்சுமணன் மற்றும் சுனில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரண்டு பேரையுமே விஷவாயு தாக்கியதால் அவர்கள் மயக்கமடைந்து கழிவுநீர் கால்வாய்க்குள் விழுந்து உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் லட்சுமணன் மற்றும் சுனிலை சடலமாக மீட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.