மத்திய அரசின் கல்விக் கொள்கையை எதிர்த்து கருணாநிதி சொன்ன   10 விஷயங்கள்!

 

மத்திய அரசின் கல்விக் கொள்கையை எதிர்த்து கருணாநிதி சொன்ன   10 விஷயங்கள்!

கடந்த இரண்டு நாள்களாக தமிழக ஊடகங்களில் கடும் பேசுப் பொருள் புதிய கல்விக் கொள்கையைப் பற்றிதான். இந்தக் கல்விக் கொள்கை இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு 2017 ஆண்டிலிருந்து உருவாக்கியது. இதனை சென்ற ஆண்டு மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியாலிடம் கொடுத்தார். அது சில நாள்களுக்கு முன் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றிருக்கிறது.

கஸ்தூரி ரங்கன் குழுவுக்கு முன்பு, டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் என்ற கேபினெட் செயலாளர் தலைமையில்தான் குழு அமைத்தார்கள். அந்தக் குழு 200 பக்கங்கள் கொண்ட ஓர் அறிக்கையைக் கொடுத்தனர். அந்த அறிக்கை குறித்து, 2016-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23-ம் தேதியன்று, தமிழ்நாட்டின் முன்னாள் மு.கருணாநிதி முன் வைத்த 10 விஷயங்கள் இவைதாம்.

மத்திய அரசின் கல்விக் கொள்கையை எதிர்த்து கருணாநிதி சொன்ன   10 விஷயங்கள்!

  1. புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு கல்வியாளர் தலைமையில் குழுவை உருவாக்காமல் அரசு அதிகாரி தலைமையில் குழு அமைத்தது ஏன்?
  2. இக்குழுவின் பல அம்சங்கள் மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளன.
  3. பொதுத்தேர்வுகளை வரிசையாக நடத்துவதால் பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் ஆகும். இதனால் அனைவருக்கும் கல்வி என்பது செயலற்றதாகும். இதனால் கிராமப்புற மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
  4. ஒரு மாணவன் தொடர்ந்து தேர்ச்சி பெறவில்லை என்றால், அவனை தொழிற்பயிற்சிக்கு அனுப்பலாம் என்பது நயவஞ்சகம் இல்லையா? இது மறைமுகமாகக் குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிடுகிறதோ என்ற அய்யத்தை ஏற்படுத்துகிறது.
  1. அனைவருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்குங்கள்.
    மத்திய அரசின் கல்விக் கொள்கையை எதிர்த்து கருணாநிதி சொன்ன   10 விஷயங்கள்!
  2. பிளஸ் 2 முடித்தவர்கள், பின்னர் தேசிய அளவிலான தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று சொல்வது, இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைக்கும்.
  3. கல்வியில் தாராளமயம் புகுந்து விடும்; கல்வி முற்றிலும் வணிக மயமாகி விடும்; கல்விக் கட்டண உயர்வுக்கு வழி ஏற்பட்டு விடும்; உயர் கல்வி செல்வந்தர் வீட்டுச் செல்லப் பிள்ளைகளுக்கு மட்டுமே உரிய தனி உடைமையாகி, பணக்காரக் கல்வி, ஏழைக் கல்வி என்ற பாகுபாட்டை ஏற்படுத்தி விடும்.
  4. பாடத்திட்டம் வகுப்பதிலும், கற்க வேண்டிய மொழிகளை முடிவு செய்வதிலும், மாநிலங்களின் விருப்பத்திற்கு மாறாக, மத்திய அரசு திணிப்பு நடவடிக்கையில் இறங்கி வருகிறது.
  5. இந்தி, சமஸ்கிருத மொழியையும், கலாச்சாரத்தையும் திணிப்பதை – மேலும் எளிதாக்கிடவே மறைமுகமாக ஆழ்ந்த உள்நோக்கத்துடன் இக்கொள்கை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
  6. “புதிய கல்விக் கொள்கை” என்ற மத யானை தமிழகத்திற்குள் புகுந்து, “கல்வி சிறந்த தமிழ்நாட்டை” நாசப்படுத்திடவோ, காலங்காலமாக நாம் போற்றி வரும் சமூகநீதி மற்றும் சமநீதிக் கொள்கைகளுக்குக் கேடு ஏற்படுத்திடவோ அனுமதிக்கக் கூடாது. வருமுன் காப்பதே அறிவுடைமை!

    மத்திய அரசின் கல்விக் கொள்கையை எதிர்த்து கருணாநிதி சொன்ன   10 விஷயங்கள்!

கருணாநிதி கூறிய இந்த பத்து விஷயங்களும் தற்போது வெளியாகியுள்ள கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவின் கல்விக் கொள்கைக்கும் பொருந்துகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.