தமிழக அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை!

 

தமிழக அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை!

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்த் தொற்றை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்னாள் அமைச்சரும் திருமங்கலம் எம்எல்ஏவுமான ஆர்.பி உதயகுமார் இன்று ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார், தமிழகத்திற்கு வரும் தடுப்பூசிகளை தட்டுப்பாடு இன்றி அனைவருக்கும் சமமாக வழங்க வேண்டும். ஒரு கோடிக்கும் மேலாக தடுப்பூசி வந்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதில் 98 லட்சம் தடுப்பூசியை அரசு பயன்படுத்தி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்று கூறினார்.

தமிழக அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை!

தொடர்ந்து பேசிய அவர், கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சான்றிதழை சீராக அரசு வழங்கினால் தான் நிவாரண உதவிகள் பெற முடியும் என்றும் வெளிப்படைத் தன்மையோடு சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் கருப்பு பூஞ்சை நோய் குறித்து பேசியவர், வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சை நோயும் கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கருப்பு பூஞ்சை நோய் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து மக்களை காக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.