நீங்கள் எல்லை மீறினால் நாங்களும் எல்லை மீறுவோம்! திமுகவை மிரட்டும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

 

நீங்கள் எல்லை மீறினால் நாங்களும் எல்லை மீறுவோம்! திமுகவை மிரட்டும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, “இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கடந்த 28ஆம் தேதி முதல் தொடங்கி மாநிலம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. நிவர் மற்றும் புரெவி புயல்கள் கரையை கடந்துள்ள நிலையில் பொருள் மற்றும் உயிர் சேதம் இல்லாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. முதல்வர் மேற்கொண்ட சீரிய முயற்சியால் நிவர் மற்றும் புரெவி புயலால் மழை நீர் தேங்கிய சேதத்தை தவிர வேறு எந்தவித சேதமும் ஏற்படவில்லை. பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தமிழக முதல்வர் இந்தியாவிற்கே முன் உதாரணமாக திகழ்கிறார்.

மக்களுக்கான களப்பணி ஆற்றுவத்தில் முதல்வர் சிறந்து விளங்குகிறார். மத்திய அரசிடமிருந்து ஆண்டுதோறும் வழங்கப்படும் பேரிடர் நிவாரண நிதியான 1360 கோடியில் முன்னதாக கொரோனோ பேரிடர் நேரத்தில் 680 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. முதல்வர் கோரிகைக்கு இணங்க மத்திய அரசு மீதமுள்ள 680 கோடி ரூபாயும் மத்திய அரசு தற்போது வழங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை நிறைவடையும் வரை வீடுகள், கால்நடை உள்ளிட்ட எந்த இழப்புகள் ஏற்பட்டாலும் உடனடியாக நிவாரணம் வழங்கப்படும். பயிர் சேதத்தை பொறுத்தவரை நீர் முழுமையாக வடிந்த பின்னர் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைதளத்தில் அடுத்தடுத்து 5 புயல் வர உள்ளதாக பரவி வருவதை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். வேலையில்லாதவர்கள் சிலர் புயல் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்

நீங்கள் எல்லை மீறினால் நாங்களும் எல்லை மீறுவோம்! திமுகவை மிரட்டும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

வேளாண் சட்ட திருத்த மசோதா விவகாரத்தில் அப்பாவி விவசாயிகளை திசை திருப்பும் வகையில் தவறான பிரச்சாரத்தை எதிர்கட்சிகள் முன்னெடுத்து செல்கிறது. வேளாண் சட்ட மசோதா விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என ஏற்கனவே முதல்வர் மற்றும் பிரதமர் விளக்கியுள்ளனர். போராட்டத்தின்போது பச்சை துண்டு போடுபவர்கள் அனைவரும் விவசாயிகள் கிடையாது. கலைஞர் எழுதிய கவிதைகள், எழுத்துகள் நாட்டு மக்களுக்கு பயன்படவில்லை அவரது வீட்டு மக்களுக்கு மட்டுமே பயன்பெற்றுள்ளது

எதிர்க்கட்சி தலைவர் முதல்வர் குறித்து வாய்க்கு வந்தப்படி பேசி வருகிறார். ஜெயலலிதா மீது தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடுக்கப்பட்டது. 2ஜி ஊழலில் அ.ராசா நிரபராதி என உச்சநீதிமன்றம் அவரை விடுக்கவில்லை. ஆதாரங்களை நிரூபிக்க தவறியதாகவே உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2ஜி வழக்கு விசாரணை இன்னும் முடியவில்லை. குற்றவாளியாக உள்ள அ.ராசா முதல்வரை விவாதத்திற்கு அழைக்க எந்த தார்மீக உரிமையும் கிடையாது, ஜெயலலிதா குறித்து இனிமேல் அவதூறாக யார் பேசினாலும் எந்த நிலைக்கு செல்ல எங்களுக்கு தெரியும், நீண்ட நாட்களாக பொதுவாழ்வில் இருந்து வரும் ஆ.ராசாவிற்கு நாவடக்கம் தேவை” எனக் கூறினார்.