ரேஷன்அரிசி கடத்தலை புகைப்படம் எடுத்தவருக்கு கொலை மிரட்டல்- டிஎஸ்பி விசாரணை

 

ரேஷன்அரிசி கடத்தலை புகைப்படம் எடுத்தவருக்கு கொலை மிரட்டல்- டிஎஸ்பி விசாரணை

திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தியதை புகைப்படம் எடுத்த இளைஞர்களுக்கு, அரிசி கடத்தல் கும்பல் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜாப்ரபாத் பகுதியில் இருந்து மர்மநபர்கள் இருசக்கர வாகனங்கள் மூலம் ஆந்திராவுக்கு ரேஷன் அரிசியை கடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கடத்தல்காரர்களை புகைப்படம் எடுத்து அதிகாரிகளுக்கு புகார் அளித்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றிரவு ஜாப்ரபாத் பகுதியில் ரேஷன் அரிசியை கடத்திக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர்.

ரேஷன்அரிசி கடத்தலை புகைப்படம் எடுத்தவருக்கு கொலை மிரட்டல்- டிஎஸ்பி விசாரணை

இதனை அறிந்த கடத்தல் கும்பலை சேர்ந்த நபர்கள் உடனடியாக அந்த பகுதியில் உள்ள சிலருக்கு செல்போனில் தொடர்புகொண்டு புகைப்படம் பிடித்தவர்கள் குறித்து கேட்டு, அவர்களுக்கு மிரட்டல் விடுத்தனர். இந்த நிலையில் அரிசி கடத்தல் கும்பல் விடுத்த மிரட்டல் உரையாடலை அந்த பகுதி இளைஞர்கள் வாட்ஸ்அப் சமூக வலைதளத்தில் பகிர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி டிஎஸ்பி பழனிசெல்வம் தலைமையிலான போலீசார் அரிசி கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்