ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 244 பேருக்கு கொரோனா உறுதி!

 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 244 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 4,526 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,47,324 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 79,662 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னையை காட்டிலும் மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று தற்போது வேகம் எடுத்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 244 பேருக்கு கொரோனா உறுதி!

இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் மேலும் 244 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,907 ஆக அதிகரித்துள்ளது.