‘ரங்கராஜன் குழு அறிக்கை’ : முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

 

‘ரங்கராஜன் குழு அறிக்கை’ : முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

ரங்கராஜன் குழு அளித்த அறிக்கை தொடர்பாக முதல்வர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

‘ரங்கராஜன் குழு அறிக்கை’ : முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

கொரோனா காரணமாகத் தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால்  தனிநபர் முதல் பெரிய தொழில் நிறுவனங்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டனர்.  இதனால் மீண்டும் பொருளாதாரத்தை  உயர்த்தும் நோக்கில், ரிசர்வ் வங்கியின் முன்னாள்  ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையிலான நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில், முன்னாள் தலைமைச் செயலர் என்.நாராயணன்,சென்னைப் பல்கலை துணைவேந்தர், பி.துரைசாமி, தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் என்.குமார், சென்னை பொருளாதாரப் பள்ளி இயக்குநர் கே.ஆர்.சண்முகம் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். 

‘ரங்கராஜன் குழு அறிக்கை’ : முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் குழு அளித்த அறிக்கை தொடர்பாக முதல்வர் இன்று ஆலோசனை நடத்துகிறார். பொருளாதார மேம்பாடு குறித்து அறிக்கை தொடர்பாக இன்று மதியம் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார்.

‘ரங்கராஜன் குழு அறிக்கை’ : முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

இந்த குழுவானது பொருளாதார பாதிப்பு, அரசுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் செலவுகள்,  பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வழிமுறைகள், மாநில அரசு மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டது. இதை தொடர்ந்து தமிழக பொருளாதாரத்தை உயர்த்த மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அறிக்கையை முதல்வர் பழனிசாமியைச் சந்தித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் கடந்த செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.