கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ரம்யா பாண்டியன்!

 

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ரம்யா பாண்டியன்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் தடுப்பூசி செலுத்திக்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். அண்மையில் நடிகர் ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலர் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்களை தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தனர்.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ரம்யா பாண்டியன்!

அந்த வகையில் நடிகை ரம்யா பாண்டியன் சென்னை காவேரி மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்திலும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். தான் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ரம்யா பாண்டியன்!

கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமான ரம்யா பாண்டியன், தாமிரா இயக்கத்தில் ஆண்தேவதை படத்தில் நடித்தார். அதற்கு பிறகு அவருக்கு சினிமாவில் அவ்வளவாக வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர், போட்டோ ஷூட்டுகள் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய ரம்யா பாண்டியன், குக் வித் கோமாளி, பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது சூர்யாவின் தயாரிப்பில் இயக்கப்பட்டு வரும் படத்தில் ரம்யா பாண்டியன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.